50% சதவீத மகளிருக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கிறது! அரசை குறை கூறும் முன்னாள் அமைச்சர்!

50% சதவீத மகளிருக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கிறது! அரசை குறை கூறும் முன்னாள் அமைச்சர்!

கு.அசோக், 

   திமுக 3 ஆண்டு ஆட்சி காலத்தில் மகளிர்களுக்கு 50% சதவீதம் மட்டுமே 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குற்றச்சாட்டு.

  இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த சுங்கச்சாவடி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக கழக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

  ஒன்றிய கழக அவைத்தலைவர் பேங்க் தேவராஜ் தலைமையில் ஒன்றிய கழகச் செயலாளர் பூண்டி பிரகாஷ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு ஆரணி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

 கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கடந்த தேர்தலில் தோல்வியை தழுவி இருந்தாலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த மகத்தான திட்டங்களை பொதுமக்களிடம் தொண்டர்களாகிய நீங்கள் எடுத்து கூறவில்லை.

  செய்யாத பணிகளை எல்லாம் செய்ததாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தேர்தலில் பொய்யாக வெற்றியை பெற்றுவிட்டார்கள்.

   அதேபோல் 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு மகத்தான திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.

  அதேபோன்று தற்போது ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்தினர் 524 வாக்குறுதிகள் அளித்தாலும் குறிப்பாக கிராமங்களில் இருக்கும் 2 கோடியே 40 லட்சம் மகளிர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தரப்படும் என உத்தரவாதத்தை கொடுத்தார்கள்.

 ஆனால், தற்போது 50% சதவீதம் என ஒரு கோடியே 16 லட்சம் மகளிர்க்கு மட்டுமே 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது¢.

  100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி தருவோம் என வாக்குறுதி அளித்தார்கள் ஆனால் நிறைவேற்றப்படவில்லை தமிழகத்தில் திமுக மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில் பல்வேறு விலைவாசி உயர்வுகளை ஏற்றி பொது மக்களை வஞ்சித்து வருவதாக பேசினார் ராமசந்திரன்.