பறை இசைப்பதில் ஏற்பட்ட கொலை! கொலையாளிகளுக்கு குண்டாஸ்!

ஜி.கே.சேகரன்,
மேளம் அடிப்பதில் ஏற்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர பகுதிகளான கோனாமேடு மற்றும் காமராஜபுரம் பகுதி இளைஞர்களிடையே மேளம் அடிப்பதில் தகறாறு ஏற்பட்டது.
இந்த தகராறு காரணமாக காமராஜபுரத்தை சேர்ந்த சந்துரு (வயது18) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கொலை குற்றத்தில் ஈடுபட்ட கோனாமேடு பகுதியைச் சேர்ந்த ஜான் என்கின்ற ராஜ்குமார்( வயது 30), ஸ்ரீதர்
(வயது 35), கார்த்தி என்கிற ஏட்டு கார்த்தி( வயது 31), அப்புனு (வயது 20) ஆகிய 4 பேரை வாணியம்பாடி நகர போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் நான்கு பேரும் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்களுக்கு பரிந்துரைத்தார்.
பின்னர் ஆட்சியர் மேற்படி நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். பின்னர், அதற்கான உத்தரவை வேலூர் மத்திய சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.