பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் பத்திரிகைகள் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம்!

ஜி.சாந்தகுமார்,
இதுவரை சென்னை சாஸ்த்திரி பவனில் செயல்பட்டு வந்த இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகம், தமிழ்நாடு & புதுச்சேரி மண்டலத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அலுவலகம் மற்றும் கூடுதல் பத்திரிகைப் பதிவாளர் அலுவலகமும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதே போல் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பு அலுவலகமும் இந்த புதிய முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்களும் சுவாமி சிவானந்தா சாலையிலுள்ள புதிய அலுவகத்தில் செயல்படும். அதன் முகவரி;
ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷன் தென் மண்டலப் பொறியியல் பிரிவு அலுவலகம்,தூர்தர்ஷன் அலுவலகம் அருகில்,
எண் 5. சுவாமி சிவானந்தா சாலை,சேப்பாக்கம்,சென்னை - 600 005.
பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் பத்திரிகைகள் பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்வோர் இனி இந்த புதிய முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு ம.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.