கலெக்டர் கங்கப்பா....!இந்திரா காந்தியை அலார்ட் செய்த அவரை மறக்க இயலுமா! மோட்ச தீபத்தில் நினைவு கூர்ந்த நிருபர்!

கலெக்டர் கங்கப்பா....!இந்திரா காந்தியை அலார்ட் செய்த அவரை மறக்க இயலுமா! மோட்ச தீபத்தில் நினைவு கூர்ந்த நிருபர்!

ம.பா.கெஜராஜ்,

வேலூர் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர்களில் ஒருவரான திரு.டி.கங்கப்பா கடந்த 9 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

அவருக்காக வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. ஆலயத்தின் செயலாளர் சுரேஷ் ஆலய தலைமை அர்ச்சகர் பாஸ்கர சிவாச்சாரியார் ஆகியோர் மோட்ச தீபம் ஏற்றினார்கள் திருவாச பாடற்களும் பாடப்பட்டது இதில் திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

இந்த தருணத்தில் கங்கப்பாவை குறித்த சில நினைவுகளை நிருபர் ஜி.குலசேகரன் நம்மிடம் பகிர்ந்தார். அதில் கடந்த 19.06.1980 முதல் 02.05.1981 ஆம் ஆண்டு வரை வேலூர் கலெக்டராக இருந்தவர் திரு.டி.கங்கப்பா.

அதற்கு முன்வரை வேலூர் கோட்டை கோவிலை முன்னிறுத்தி "சிலை இல்லாத கோவில்" என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால் கங்கப்பா அவர்கள் கலெக்டராக பதவியில் இருந்த போது அந்த வழக்கச் சொல்லை போகப் பண்ணினார்.

தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் வசம் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோவிலுக்குள் திடீரென்று சிலர் சிலையை கொண்டு வந்து வைத்துவிட்டனர். அதே நேரத்தில் வேறு ஒரு பகுதியில் சிலை காணவில்லை என்று ஒரு பிரச்சனை கிளம்பியது.

இந்த இரண்டு விஷயங்களும் அப்போதைய ஆட்சியர் கங்கப்பாவின் நேரடி பார்வையின் கீழ் நடந்ததாக மத்திய அரசுக்கு ஐ.பி. சோர்ஸ்களை தட்டிவிட்டனர்.

அப்போது இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் பிரதம மந்திரியாக பதவியில் இருந்தார். தமிழ்கத்தில் எம்.ஜி.இராமசந்திரன் முதல்வர். மத்திய அரசு மாநில அரசிடம் கேள்வி எழுப்பியது. ஒரு மாவட்ட ஆட்சியரே இந்த விஷயத்தில் இன்வால்வ் ஆகியிருப்பதை ஏற்கமுடியாது என்று கொஞ்சம் கடுமையாக கேள்வியெழுப்பியது.

அப்போது தான் மாநில உளவுத்துறை அளித்த ஒரு ரிப்போர்ட்டை பிரதமர் இந்திரா காந்தியின் பார்வைக்கு முதல்வர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் கொண்டு சென்றார்.

 அதில் தாங்கள் (இந்திராகாந்தி) மதுரை வந்திருந்த போது தாக்கப்பட்டீர்கள் அல்லவா? அப்போது பழ.நெடுமாறன் அவர்கள் தான் உங்களை களத்தில் காப்பாற்றினார். இந்த தாக்குதல் நடக்கும் என்பதை அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியான இதே கங்கப்பாதான் உளவுத்துறைக்கு இன்டிமேஷன் கொடுத்தார். இதனால் பேராபத்து தவிர்க்கப்பட்டது. இருந்த போதும் சிலை விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

 அதன் பின்னரே சாந்தமான பிரதமர் இந்திராகாந்தி சிலையை அகற்ற வேண்டாம் என்று தொல்பொருள் துறைக்கு அறிவுறுத்தினார்.

  இருந்தாலும் கூட அவர் வேலூர் ஆட்சியராக நீடிக்க அரசு விடவில்லை.

  வேலூர் கோட்டைக் கோவிலுக்குள் சிலை வைத்து பொதுமக்கள் வழிபாட்டுக்காக வழிவகுத்த அவரை அரசு அப்பணியிலிருந்து மாற்றியது.

  அதே போல் அரியூர் மலைக்கோடியில் அமைந்துள்ள தங்கக்கோவிலின் பல பணிகளுக்கு அவரது பங்கும் உள்ளது.

 அவரை இந்த தருணத்தில் நினைவு கூறுவது மிகச்சரியாக இருக்கும் என்றார்.