சவுக்கு சங்கர் மீது குவியும் வழக்குகள்!

சவுக்கு சங்கர் மீது குவியும் வழக்குகள்!

டி.இ.முகமது,

சவுக்கு சங்கர் யூடியூபராக வலம் வந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர். அவரை கோவை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக அவர் மீது புகார்கள் எழுந்ததின் பேரில் அவர் மீது நடவடிக்கை பாய்ந்தது. 

 அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 7 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆக தற்போதைக்கு அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 பின்னர்   நீதிமன்ற உத்தரவுப்படி தேனி மாவட்ட போலீசார் சவுக்கு சங்கர் வீட்டில் சோதனை செய்தனர். அவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் மதுரவாயல் வருவாய் துறையினர் வரவழைக்கப்பட்டு அவர்களின் முன்னிலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் சோதனை நடத்தினார்.

 10 மணி நேரமாக நடத்திய சோதனை முடிவில் சவுக்கு சங்கர் வீட்டில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம், கஞ்சா சிகரெட்கள், கஞ்சா அடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள், லேப்டாப் மானிட்டர், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

 சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக போலிசார் சோதனை நத்தினர். மேலும், சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

 இந்த சோதனையில் ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

  அதே போல் சென்னை தி.நகரில் உள்ள சவுக்கு மீடியா அலுவலகத்திலும் தேனி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது லேப்டாப்பில் உள்ள டிஜிட்டல் ஆவணங்கள், பென் டிரைவ் கைப்பற்றப்பட்டது.

  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக சவுக்கு சங்கர் பேசியிருந்த நிலையில் அது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.