அடேங்கப்பா....! இன்ஸ்பெக்டர் வீட்டில் 450 சவரன் நகை கொள்ளையா?

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 450 சவரன் தங்க நகைகள் திருடு போயிருப்பதாக அவரே புகார் அளித்திருக்கிறார்.அ
துமட்டுமின்றி ரொக்க பணம் 5 லட்சமும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
மதுரை மாவட்டம் பாசிங்கபுரம், மீனாட்சி நகரில் வசிப்பவர் ஷர்மிளா.
இவர் தமிழ்நாடு காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
தற்போது அவர் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டில் புகுந்த சில கொள்ளையர்கள் 450 சவரன் தங்க நகைகளையும் ரூபாய் 5 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
முன்னதாக 250 சவரன் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்ஸ்பெக்டர் ஷர்மிளாவே 450 சவரன் தங்க நகைகள் திருடு போயிருப்பதாக புகாரில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த தகவல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனெனில் இவ்வளவு தங்க நகைகள், இவ்வளவு பணம் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டருக்கு எப்படி வந்தது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆக மொத்தத்தில் இந்த விஷயம் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகவே முடியும் என்று கூறப்படுகிறது.