அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது!

N.Naresh,
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் கைது செய்தது.
பின்னர் அவர் திகார் சிறையில் நீதிமன்ற காவலுக்கு வைக்கப்பட்டார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தேர்தல் காலத்தை காரணம் காட்டி ஜாமீன் கோரப்பட்டது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று 40 பக்கம் பிரமாணம் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த ஜாமின் ஆனது கடைசி கட்ட வாக்குப்பதிவான ஜூன் 1ஆம் தேதி அன்று வரை வழங்கப்பட்டிருக்கிறது