ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஒருவன் சுட்டுக் கொலை! முதல் வெட்டு வெட்டியவன் இவன்தான்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஒருவன் சுட்டுக் கொலை! முதல் வெட்டு வெட்டியவன் இவன்தான்!

ம.பா.கெஜராஜ்,
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் வெட்டு வெட்டிய திருவேங்கடம்  என்பவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

கடந்த ஐந்தாம் தேதி அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். 

 தடுக்க வந்த அவரது சகோதரர் வீரமணி மற்றொரு நபர் உள்ளிட்டவர் களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இந்த கொலை தொடர்பாக முதற்கட்டமாக எட்டு பேர் காவல் நிலையத்தில் சரண்டர் ஆன நிலையில் மேலும்  மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 

அந்த வகையில் மொத்தம் 11 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர்.

பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 இருப்பினும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தன.

இந்நிலையில். சென்னை சிட்டி கமிஷனர், சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி உள்ளிட்ட பதவிகளில் அதிரடி மாற்றங்கள் செய்தார் முதல்வர். உடனே விசாரணை சூடு பிடித்தது. 

அப்படி இருக்க திருவள்ளுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அருள் என்பவரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். 

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமே  ரவுடி சுரேஷின் தம்பியும் அவனது கூட்டாளிகளும் தான் என போலீசார் ஏற்கனவே கண்டறிந்த நிலையில், மேற்படி இந்த கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது திருவள்ளுவர் நீதிமன்றத்தில் பிராக்டிஸ் செய்து வந்த வழக்கறிஞர் அருள் தான் என்பது அந்த விசாரணையில் உறுதியானது.
பிடிபட்ட வழக்கறிஞர் அருள் ஆற்காடு சுரேஷின் மச்சான் என்பதும் தெரியவந்தது.

அப்படி இருக்க நீதிமன்ற காவலில் இருந்த 11 பேரையும் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி  பெற்றது காவல்துறை.

அதன் அடிப்படையில் அவர்கள் தனித்தனியான இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். 

இதில் கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் திருவேங்கடம் என்பவனை விசாரணை நடத்தி வந்தனர். 

அப்போது கொலையாளி திருவேங்கடம்  தான் தான் ஆம்ஸ்ட்ராங் காலில் முதல் வெட்டு வெட்டினேன் என்று போலீசாரிடம் கூறியதுடன் அதற்காக பயன்படுத்தப்பட்ட கத்தி மேலும் சில ஆயுதங்களையும் ஓரிடத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறான்.

அவன் சொன்ன தகவலின் அடிப்படையில் திருவேங்கடத்தை அழைத்துக் கொண்டு புழலுக்கு அருகே உள்ள வெஜிடபிள் வில்லேஜ் என்ற பகுதியில் ஒரு தகர கொட்டகைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அங்கு திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த வைத்திருந்த கத்தியையும் கைது துப்பாக்கி ஒன்றையும் மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டி இருக்கிறான்.

அப்பொழுது போலீசார் எதிர்பாராத நேரத்தில் அந்தத் துப்பாக்கியை எடுத்து காவலர் ஒருவரை திருவேங்கடம் தாக்க முயன்றான்.இதில் காவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சூழ்நிலையை உணர்ந்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் பாதுகாப்புக்காக வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து திருவேங்கடத்தை  சுட்டு வீழ்த்தினார்.

ஆக மொத்தம் பரபரப்பான கொலை வழக்கில் முதல் வெட்டு வெட்டிய குற்றவாளி திருவேங்கடம் போலீசார் கையாலேயே முதல் போனியாகி இருக்கிறார்.

சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது நினைவு கூறு தக்கதாகும்.