கொலை குற்றவாளிக்கு கை விலங்கு போடாதது ஏன்! எதற்காக இந்த அவசர என்கவுண்டர்? சந்தேகத்தை கிளப்பும் எடப்பாடி பழனிச்சாமி!

ஜி.கே.சேகரன்,
ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளியை சுட்டு கொன்றது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - கொலை குற்றவாளிக்கு கை விலங்கு போடாதது ஏன் எனஅதிமுக பொதுச்செயலாளரும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர்எடப்பாடி பழனிச்சாமி வந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில்பணபலம் அதிகார பலத்தினால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர்.
காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன் அடிப்படையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக தமிழ்நாடு விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ளாத திமுக அரசு, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.
ஆனால் அதிமுக இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கபினி அணையில் தற்பொழுது தண்ணீர் நிரம்பியுள்ளது.அதனை தேக்கி வைக்க முடியாமல் கர்நாடக அரசுஅதனை தற்போது திறந்து விட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் சரணடைந்துள்ளார்.சரண் அடைந்தவரை என்கவுண்டரில்சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஏன் அவர் அவசர அவசரமாக என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொலை குற்றவாளியை கை விலங்கு போட்டுத்தானே அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஒரு என்கவுண்டர் நடந்திருப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார்.
பேடியின் போது முன்னாள் அமைச்சர் கே.சி..வீரமணி மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோர் உடன் இருந்தனர்.