மரத்தின் மீதிருந்து குதித்தவரை பந்தல் அமைத்து காப்பாற்றிய அலுவலர்கள்!

  ஜி.கே.சேகரன்,

 மரத்தின் மேலே இருந்து குதித்து படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வடமாநில இளைஞரால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்திற்கு உட்பட்ட காமராஜா ¢நகர் 36 வது வார்டு பகுதியில் 25 அடி உயரத்தில் அரச மரம் உள்ளது.  ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லிங்கேஸ்வரன்( 25) என்ற இளைஞர் இன்று காலை மரத்தின் மீது ஏறிக்கொண்டு கீழே குதித்து விடுவதாக மிரட்டி வந்தார்.

 இதனைப் பார்த்து அப்பகுதிமக்கள் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும்தீயணைப்புத் துறையினரும் இணைந்து அந்த இளைஞரை மீட்கும் பணியில் இறங்கினர்.

  முதலாவதாக மரத்தின் அருகில் இருந்த மின்சார ட்ரான்ஸ்பா£மரை ஆஃப் செய்ய வைத்துவிட்டு, அந்த இளைஞரை காப்பாற்றுவதற்காக கீழே பந்தல் அமைக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர்  மரத்தின் மீது ஏறினர். தீயணைப்பு துறையினர் மரத்தின் மீது ஏறுவதை அறிந்த வடமாநில இளைஞர் மரத்திலிருந்து கீழே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் குதித்தார். இதனால் அந்த இளைஞருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

  பின்னர் நகர போலீசார் வடமாநில இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  சிகிச்சை பெற்று வரும் நிலையில் வடமாநில இளைஞரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது.