மாலை ஆறுமணிமுதல் ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக்! பதற்றத்தில் தென்மாவட்டங்கள்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 5 நாட்களாக அதிரடி சோதனை நடந்தது.
இதுவரை சுமார் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டதாக 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தும், ரூ.36.95 லட்சம் அபராதம் விதித்தும் நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டண கொள்ளை
தொடர் விடுமுறை என்பதால் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக பல புகார்கள் வந்த நிலையில் இந்த புகார் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்த.து
அடாவடி ஸ்டிரைக்
ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குசென்றுள்ளனர். இன்றுடன் விடுமுறை முடியும் நிலையில் அனைவரும் சென்னை திரும்ப தயாராகி வருகின்றனர்.
அப்படியிருக்க இன்று செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பஸ்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிக கட்டண வசூல் எனக்கூறி சிறை பிடிக்கப்பட்ட 119 ஆம்னி பஸ்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்களுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும் பயணிகளை பாதிக்காத வண்ணம் கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் பயணிகளை பாதிக்காத வண்ணம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆம்னி பஸ்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் பாதிக்கப்படுவார்கள். இந்த அறிவிப்பால் தென்மாவட்டங்களில் பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளது.
தமிழக அரசு
இந்நிலையில் விடுமுறை முடிந்து சென்னைக்கு பலரும் திரும்புவார்கள் என்பதால் மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் புதன்கிழமை வரை இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.