ஃபெலிக்ஸ் ஜெரால்டு கண்டெய்னர் வீட்டில் ஒன்றுமே சிக்கவில்லை! வெறும் கையுடன் திரும்பிச் சென்ற போலிசார்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு கண்டெய்னர் வீட்டில் ஒன்றுமே சிக்கவில்லை! வெறும் கையுடன் திரும்பிச் சென்ற போலிசார்!

க.பாலகுரு,

திருவாரூர் மாவட்ட மன்னார்குடி அருகே ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு  சொந்தமான கண்டெய்னர் வீட்டில்  திருச்சி காவல்துறையினர்  சோதனை செய்தனர், ஆனால் சோதனையின் போது ஒன்றுமே சிக்கவில்லை என்பதால் போலிசார் திரும்பிச்சென்றனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கோட்டசேரி கிராமத்தில் ரெட் ஃபிக்ஸ் நிறுவனர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு  சொந்தமான கண்டெய்னர் வீட்டில் அவரது மனைவி ஜேன் ஃபெலிக்ஸ் முன்னிலையில் திருச்சி காவல்துறையினர்  சோதனை செய்தனர்.

 பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில்அவரது பேட்டிகளை ஒளிபரப்பிய யூ டியூப் சேனலின் எடிட்டரான ஃபெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

  தனியார் யூடியூப் சேனல் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது சேனலில் வெளியிட்டார்.

அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில், அது எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது.

 ஆகவே ஃபெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதனை தொடர்ந்து ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு சொந்தமான இடங்களில் கடந்த சில தினங்களாக போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.

  அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டசேரி என்னும் கிராமத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் தற்காலிக கண்டெய்னர் வீடு உள்ளது.

 அதில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஆவணங்கள் ஏதும் வைத்துள்ளார்களா என திருவாரூர் மாவட்ட துணை கண்காப்பாளர்  மணிகண்டன் தலைமையில் திருச்சி சோதனை செய்தனர்.

  அப்போது, ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி ஜேன் ஃபெலிக்ஸ் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர் முடிவில் ஆவணங்கள் ஏதும் கிடைக்காமல் திரும்பி சென்றனர்.