ஓபிஎஸ் டீம் நிர்வாகி மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்!

ஓபிஎஸ் டீம் நிர்வாகி மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்!

 கு.அசோக்,

சாலை, கால்வாய் வசதிகளை ஏற்படுத்த விடாமல் தடுக்கும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர், பொதுமக்களுடன் சேர்ந்து எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு நிலவியது.

 ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீராம்பாடி ஊராட்சியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றன ர்.இங்கு தேவராஜ் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கிராமத்தின் வளர்ச்சிக்காக சாலை கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை ஒப்பந்த முறையில் ஏற்படுத்தி தரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

 அப்போது, அதே பகுதியில் உள்ள ஓபி.எஸ்  கட்சியின் ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் என்பவர் ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாக கூறப்படுகிறது.

 இதனால் எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், தனது பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.