குட்கா விற்றவர்களுக்கு அபராதம்! சூதாட்டத்தையும் தடுக்க கோரிக்கை!

குட்கா விற்றவர்களுக்கு அபராதம்! சூதாட்டத்தையும் தடுக்க கோரிக்கை!

கு.அசோக், 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடரும் காவல்துறை அதிரடி நடவடிக்கை சிப்காட் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைத்து ஒவ்வொரு கடைகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு.  அதே போல் ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் ஏழைகளை ஏமாற்றும் காட்ட சூதாட்டம் மற்றும் கள்ள லாட்டரி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

  ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை  விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

 அந்த வகையில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

  அதன் ஒரு பகுதியாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  இந்த பொருட்களை விற்பனை செய்த 6 நபர்களின் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் ஆகியோர் தலைமையில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

   மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா குட்கா புகையிலை போன்ற பொருட்களின் மீது காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்கின்றனர்.

 அதே போல், ஆற்காடு, அரக்கோணம், வாலாஜா, சோளிங்கர்  ஆகிய பகுதிகளில்  காட்டன் மற்றும் கள்ள லாட்டரி போன்றவை அதிக அளவில் நடத்தப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறார்கள். அவர்களது குடும்பங்கள் கஷ்டநிலைக்கு சென்கின்றன.

 ஆகவே இந்த தொழில் செய்து ஏழைகளை ஏமாற்றி பிழைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோருகின்றனர்.

 ஆனால் ஒன்னுங்க இதுகுறித்து எஸ்.பி.அவர்களின் நேரடி பார்வைக்கு விஷயம் சென்றால் மட்டுமே நேர்மையான நடவடிக்கை பாயும்.