கிறிஸ்தவ தேவாலய பதவிக்கான போட்டியில் அடிதடி!ஆடி அசைந்து வந்த ஆம்பூர் நகர போலிசார்!

கிறிஸ்தவ தேவாலய பதவிக்கான போட்டியில் அடிதடி!ஆடி அசைந்து வந்த ஆம்பூர் நகர போலிசார்!

 ஜி.கே.சேகரன்,

ஆம்பூரில் தேவாலய போதகர்கள் கலந்தாய்வு கூட்டத்தின் போது இரு பிரிவினரிடையே  ஏற்பட்ட மோதலில் திமுக மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை அடித்து நொறுக்கினர். இதனால் அவர் நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் சிகிச்சை அளிக்காததால் உறவினர்கள் மருத்துவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியில் உள்ள ஆம்பூர் கிருத்துவ சபை சங்க அலுவலகத்தில் போதகர்கள் இட மாற்றத்திற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

  இதில் சென்னை, பெங்களூர், கே.ஜிஎப் மற்றும் ஆம்பூர், பேர்ணாம்பட்டு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போதகர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். காலை முதலே நடைபெற்று வந்த இந்த கூட்டத்தில் இரு பிரிவினரிடையே சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் கூட்டம் முடிவு பெறும் நிலையில் இருந்த போது திடீரென இரு பிரிவினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.

  இதில் பேர்ணாம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஏசுதாஸ் என்பவரை அதே பகுதியை சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி வில்லியம் பீட்டர் மற்றும் அவரது மகன் பிரசன்னா, வில்லியம்பீட்டரின் தம்பி யோபு அவரது மகன் லிவிங்ஸ்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

  இதில் நெஞ்சுவலி காரணமாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த போது நீண்ட நேரம் மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி  கூட அளிக்காமல் இருந்ததால் அங்கு பிரச்னை ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த ஏசுதாஸின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மருத்துவமனையில் இருந்த மருத்துவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  இவ்வளவு பிரச்சனை நடந்துக் மூட ஆடி அசைந்து வந்த ஆம்பூர் நகர காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் சமாதானம் அவர்களை செய்து வைத்தனர். பின்னர்  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் நகர போலீசார் இரு தரப்பினரிடம் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர்.