சரக்கு தள்ளாட்டத்தில் வாலிபருக்கு பாட்டில் குத்து!

ஜி.கே.சேகரன்,
மது போதையில் நண்பனுக்கு சரா மாறியாக பாட்டில் குத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜார்ஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் கோபிசங்கர். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பரான கோபால் மகன் ஆதவன் ஆகிய இருவரும் இன்று ஜார்ஜ் பேட்டை பகுதியிலுள்ள கிணற்றின் அருகே அமர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஆதவன் திடீரென தான் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து கோபி சங்கரின் விலா எலும்பில் பலமாக குத்தியதால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வர அங்கிருந்து ஆதவன் தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் உடனடியாக கோபி சங்கரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் கோபிசங்கர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிர்க்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குத்தியவருக்கும் குத்துபட்டவருக்கும் வயது 19...அடப்பாவிகளா?