அயோத்தி கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள்! காங்...சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் ஆபத்து என்கிறார் பிரதமர் மோடி!

ம.பா.கெஜராஜ்,
''காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள்'' என்று உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி மத்தை மையப்படுத்தி சர்ச்சையாக பேசினார்.
உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டு நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மறுபக்கம், நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த இந்தியா கூட்டணி முயற்சிக்கிறது.
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள். புல்டோசரை கொண்டு எங்கு இடிக்க வேண்டும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர் பாடம் கற்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
அவரது பேச்சில் மதசார்பு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் சொல்லி வருகிறார்கள்.