ஓடை மற்றும் ரோட்டில் குப்பைகளை கொட்ட வேண்டாம் மேயர் ஜெகன் வேண்டுகோள்!

ஓடை மற்றும் ரோட்டில் குப்பைகளை கொட்ட வேண்டாம் மேயர் ஜெகன் வேண்டுகோள்!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

  தூத்துக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஒவ்வொரு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

 அதன்படி வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அதில் பத்தொன்பது மனுக்கள் மாநகராட்சி வருவாய் துறை தொடர்பான மனு பெறப்பட்டது.

 இந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று மேயர் ஜெகன் ஆணையர் மதுபாலன் உத்தரவிட்டிருந்தனர்.

   அதன் அடிப்படையில் நான்கு நாட்களில் 16 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு   மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

 அப்போது மேயர் ஜெகன் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் வாரம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

 அந்த மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. சாலை வசதி மட்டும் சீனியாரிட்டி அடிப்படையில் ரோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

  மற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது மேலும் தூத்துக்குடி மாநகரில் உள்ள பக்கீல் ஓடை மற்றும் ரோடுகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வடக்கு மண்டல உதவி ஆணையர் சுரேஷ்குமார் வருவாய் ஆய்வாளர் நசரே ன் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.