ஹான்ஸிக்காக கொலை!

கு.அசோக்,
மது அருந்தும்போது ஹான்ஸ் கேட்டதால் எழுந்த தகராறில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை - மற்றொரு நண்பரை ஜூஸ் பாட்டீலால் குத்திய நிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி!
இராணிப்பேட்டை மாவட்டம் மாசாப்பேட்டை அண்ணாநகர் பகுதியில், போது ஹான்ஸ் கேட்டதால் இருதரப்பினரிடையே மோதல்.மோதலில் தினேஷ்(28) என்ற வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது நண்பர் சிவராஜ்(34)
ஜூஸ் பாட்டிலால் குத்தப்பட்டு பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பரத்(25) என்பவரை கைது செய்த ஆற்காடு நகர போலீசார், தங்களுடைய முக்கிய குற்றவாளிகளான பாலாஜி மற்றும் ரகு ஆகியோரை தேடி வருகின்றனர்.