வட்டாட்சியர் அலுவலக வாயிற்படியில் நில அளவையர்கள் போராட்டம்!

எம்.ஏ.கண்ணன்,
ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நில அளவையர்கள் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நில அளவை இயக்ககத்தாலும், தமிழக அரசாலும் தீர்வு காணப்படாமல் தொடர்ந்து பல்வேறு நில அளவை பணிகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனால் நில அளவைகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.
களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும், கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க கோருதல், சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் அணுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் சுமத்துவதையும், நியாயமான தள்ளுபடி களுக்கு ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதை கைவிட வேண்டும் என்று கோருகின்றனர்.
மேலும், ஆய்வாளர் துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும் என்பதை உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியகுளம் தாலுகா நில அளவையர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதை வேடிக்கைப் பார்த்துவிட்டு சென்றனர்.
மேலும் வரும் 19ஆம் தேதி மற்றும் 22 முதல் 23ஆம் தேதி வரை கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நில அளவைகள் தெரிவித்துள்ளனர்.