மறியல் செய்த நெசவாளர்களின் வீட்டை ஆய்வு செய்த வட்டாட்சியர்!

கு.அசோக்,
கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் நெசவுத் தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் கிராமத்துக்கு உட்பட்ட அண்ணா நகர் ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் நெசவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு சார்பில் இதுவரை எங்களை வந்து பாக்கவில்லை எனவும், மீன்பிடி தடை காலத்தில் எப்படி மாணவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் போல் எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து வாழைப்பந்தல்பேருந்து நிறுத்துதத்தில் சாலை மறியல் ஈடுபட்டடனர்.
இந்த போராட்டமானது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. தகவல் அறிந்து வந்த கலவை வட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர் அமரேசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நெசவு தொழிலில் ஈடுபடும் வீடுகளுக்கு நேரடியாக சென்று வட்டாட்சியர் ஆய்வு செய்ததோடு உங்களுக்கான நிவாரண உதவி மற்றும் மழை நீர் கால்வாய் அமைப்புகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
13 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்த கிராமம்!
இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதூர் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் 60 வீடுகள் உள்ளன. கடந்த பெஞ்சல் புயல் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் 13 நாட்களாக மின்சாரம் இல்லை எனக் கூறப்படுகிறது.
அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தங்கள் பகுதிக்கு மின்சாரம் இல்லாததால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் நீர் பாய்ச்ச முடியாமல் காய்ந்து போய்விட்டன.
இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் பனப்பாக்கம் டு ஓச்சேரி சாலையில் காலி குடங்கள் மற்றும் நெல் நாற்றுக்களை சாலையில் வைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டடனர்.
அதன் பின் தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதின் பேரில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.