பெண்ணின் கண்ணை மறைத்த காமம்! திருப்பதி அருகே மர்மமாய் பற்றி எரிந்த வீடுகள்!

வி.டி.வித்யாசாகர்,
திருப்பதி மாவட்டம் சந்திரகிரி அருகே உள்ள கிராமம் சேனம்பட்லா. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மொத்தம் 19 வீடுகள் திடீர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் பயந்து நடுங்கினார்கள்.
மேலும் இது போன்றதீ விபத்தில் ஆயிரக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் நாசமாகியதுடன் பலரும் காயமடைந்துள்ளனர்.
கிராமத்துக்கு பில்லி சூனியம், ஏவல் வைத்துவிட்டார்கள் என நினைத்த மக்கள் பூஜைகளையும், சடங்குகளையும் செய்தனர். இருந்தாலும் வீடுகள் எரிந்தன.
இதனால் கிராமத்தில் ரத்தக்காட்டேரி சுற்றுவதாக புரிந்துக் கொண்ட கிராமக்கள் ஊரைவிட்டு காலி பண்ணிக்கொண்டு கிளம்பினார்கள்.
இது குறித்து அறிந்த போலீஸார், அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை எனத் தெரியவந்தது.
ஆகவே, இந்த கிராமத்தில் ஏதேனும் அமானுஷ்யம் இருக்குமோ என சந்தேகப்பட்டனர்.
அதன் பின்னர், முதன் முதலில் யார் வீட்டில் தீப்பற்றும் சம்பவம் நடந்தது என தேடிய போது தான் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
19 வயது இளம் பெண் கீர்த்தி பேச்சில் சந்தேகமடைந்த போலீஸார், கூடுதல் எஸ்.பி.ஜெ.வெங்கடராவ் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அவள் நடந்த உண்மைகளை கூறினார்.
சில வருடங்களுக்கு முன் அப்பெண்ணின் தந்தை அவர்களை விலகி சென்றிருக்கிறார். இதனால் தனிமையில் இருந்த அவரது தாய்க்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் வரை சென்றிருக்கிறது.
அதில் பல ஆண்களுடன் அப்பெண்ணின் தாயார் உல்லாச உறவில் இருந்தாள்.
தாயின் இந்த காமலீலைகளை தெரிந்துகொண்ட அவரது மகள், இந்த கிராமத்தை விட்டே சென்றுவிடலாம் எனக் கூறியிருக்கிறார்.
ஆனால் அங்கிருந்து வர அவரது தாய் மறுத்திருக்கிறார். இதையடுத்து, இந்த ஊரில் பேய் நடமாட்டம் இருப்பதாக சொன்னால் அங்கிருந்து சென்றுவிடலாம் என யோசித்த அவரது மகள், முதலில் தங்கள் வீட்டுக்கே தீ வைத்திருக்கிறார்.
பின்னர், தனது தாயுடன் கள்ள உறவில் இருந்த ஆண்களின் வீடுகளுக்கு அருகே நடு இரவில் சென்று யாருக்கும் தெரியாமல் தீ வைத்து வந்துள்ளார்.
பின்னர், அடுத்த நாள் காலையில் ஊரே பயத்தில் இருக்கும் போது, இவரும் அவர்களை மேலும் பயமுறுத்தும் விதமாக பேய் கதைகளை கட்டி வந்திருக்கிறார்.
இந்த விஷயம் அனைத்தையும் போலிசாரிடம் ஒப்புக்கொண்ட அந்த பெணை (கீர்த்தி) போலீஸார் கைது செய்தனர்.
தாயின் காமக்களியாட்டங்களை நிறுத்துவதற்காக இளம்பெண் செய்த காரியத்தால் திருப்பதி மாவட்டம் கலங்கிவிட்டது.