அணைகட்டுவதை தடுக்க ரத்தம் சிந்துவோம்! வேலூர் - திருப்பத்தூரில் விவசாயிகள் போராட்டம்!
கு.அசோக்,
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாலாறு பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்பாட்டம்,
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளை கட்டவுள்ளது இவ்வாறு அணைக்கட்டினார் வேலூர் இராணிப்பேட்டை, திருப்பத்தூ£,¢ திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுபாடும் வேளாண்மையும் பாதிக்கும்.
ஆந்திர அரசின் இந்த செயலை கண்டித்தும் இதனை தடுக்க தமிழக அரசு சட்டபடியான நடவடிக்கைகளை எடுக்ககோரி பாலாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் மார்த்தாண்டன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
இதில் திரளானோர் பங்கேற்று தமிழகத்தின் நீர் உரிமைகளை பாதுகாக்கவும் ஆந்திர அரசை கண்டித்தும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஆந்திரா பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதை தடுக்க கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
திருப்பத்தூர்
ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் விவசாய சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகளின் ஒன்று சேர்ந்து எல்லையிலும்,பின்னர் ஆந்திரா அரசு கட்டிய தடுப்பணை மீது நின்றுகொண்டு கோஷங்கள் எழுப்பியும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடத்தினர்.
ஏற்கனவே தடுப்பணை கட்டுவது தொடர்பாக கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக ஆந்திரா அரசு செய்யபட்டு வருவதாக கூறி இவற்றை மீறி ஆந்திரா அரசு தடுப்பணை கட்ட முற்பட்டால் அதை தகர்க்கவும் இரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம் என்று கூறி இந்த ஆர்பாட்டத்தின் வாயிலாக கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.