மலைவாழ் மக்களுக்கு உண்டு உறைவிடப்ள்ளி! தொழிற்கல்வியில் இலவசம்! ஆட்சியர் பேச்சு!

 ஜி.கே.சேகரன்,

அணைக்கட்டில் இலவச பட்டா வழங்கும் விழா 1100 பேருக்கு மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி மற்றும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் பட்டாக்களை வழங்கினர் - பீஞ்சமந்தை மலை கிராமத்தில் உண்டு உறைவிட பள்ளி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் - அம்மலைகிராம மாணவர்கள் உயர் கல்வி பெற அரசு இலவசமாக கல்வி வழங்கவுள்ளது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு - 1350 கோடியில் அனைக்கட்டு தொகுதியிலும் இரண்டாம் கட்டமாக காவிரிகுடிநீர் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேச்சு.

 வேலூர் மாவட்டம், அணைக்கட்டு, கெங்கநல்லூரில் வேலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் 1100 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கும் விழாவானது மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது. இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு,மற்றும் அனைக்கட்டு வட்டாட்ச்சியர் வேண்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனா.¢ 1100 மக்களுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.

 இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேசுகையில் தமிழக முதல்வரின் உத்தரவின்படி மக்களுக்கு அர்பணிப்பு உணர்வுடன் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவைகளை போக்கி வருகிறோம். மேலும் அணைக்கட்டில் உள்ள மலைகிராமமான பீஞ்சமந்தையில் மாணவர்கள் கல்வி அறிவை பெற அங்கேயே ஒரு உண்டு உறைவிட பள்ளி அமைக்கவும், மேலும் அவர்கள் உயர்கல்வி மற்றும் பாலிடெக்னிக் போன்றவைகளில் அரசு மூலம் இலவசமாக படிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பேசினார்.

 இவ்விழாவில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசுகையில், இந்த அணைக்கட்டு தொகுதியை மேம்பாடு அடைய செய்துள்ளோம். மேலும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு கிராம பகுதிகளிலும் அணைக்கட்டு தொகுதியில் காவிரி கூட்டுகுடிநீரை பெறும் வகையில் ரூ.1350 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

 ஆகவே அணைக்கட்டில் குடிநீர் பஞ்சமும் இனி ஏற்படாது என பேசினார்.

 திடீர் ஆய்வு,

 அணைக்கட்டு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஆதிதிராவிடர் நலதுறை ஆணையருமான லட்சுமி பிரியா மற்றும் ஆட்சியர் ஆய்வு நடத்தினர்.

  அனைணக்கட்டு மூலைகேட்டில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் இன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையருமான லட்சுமி பிரியா ஆய்வு செய்தார் அப்போது மாணவர்கள் தங்குவதற்காக வசதிகள் சரியாக உள்ளனவா உணவுகள் சுகாதாரமா சமைத்து வழங்கபடுகிறதா கழிவறைகள் தூய்மையாக உள்ளனவா என ஆய்வு செய்து மாணவர்களிடமும் கேட்டறிந்தார்.

 மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.