கர்நாடக முதலமைச்சர் பதவி:- குமாரசாமியின் நய வஞ்சக பிளானை அடித்து நொறுக்கிய டிகேசிவக்குமார்!

எஸ்.செல்வராஜ்,
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்எல்ஏக்கள் பலர் காங்கிரசில் இணைய தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் அவரது துணை டி.கே. சிவகுமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசல் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மூக்கை நுழைக்கும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரான குமாரசாமி கர்நாடக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு மூவ் செய்திருக்கிறார்.
பெங்களூருவில்அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முதல்வராக விரும்பினால், தங்களின் 19 எம்எல்ஏக்களின் ஆதரவையும் அளிக்கிறோம், என்னை நம்பலாம் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் நிலையை பார்க்கும் போது எத்தனை பேர் முதல்வராக விருப்பத்துடன் உள்ளனர் என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் நச் கொடுத்தார்.
இந்நிலையில் துணை முதல்வர் டி. கே .சிவக்குமார், குமாரசாமியின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். அதாவது "நான் (முதல்வராக பதவியேற்க) அவசரப்படவில்லை. நான் இதற்காக யாரிடமும் கோரிக்கை வைக்கவில்லை, கட்சி தலைமையிடம் கேட்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார்.
நாங்கள் கூட்டுத் தலைமையின் கீழ் தேர்தலில் போட்டியிட்டோம். நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். முதல்வர் சித்தராமையாவுக்கு தான் விசுவாசமாக இருப்பதாக கூறிய டி.கே சிவக்குமார் கட்சியின் உயர்மட்டத் தலைமையின் உத்தரவுகளை கடைப்பிடித்து வருவதாக கூறினார்.
குமாரசாமியின் நய வஞ்சக பிளானை, டி.கே சிவக்குமார் தடாலடியாக நிராகரித்து கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.