பயணிகள் ரயிலில் ஏற்றப்பட்ட கேஸ் சிலிண்டர்!

பா.சுரேஷ்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் கேஸ் சிலிண்டரை சிலர் ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.
அப்போது அங்கிருந்த ஒருவர் இதனை வீடியோ எடுத்துள்ளனர். அதனை கண்ட அவர்கள் ரயிலில் ஏற்றுவதை நிறுத்திவிட்டு மீண்டும் அவற்றை இறக்கி அவரிடம் வீடியோ எடுக்க கூடாது என மிரட்டினர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலா பயணமாக 60க்கும் மேற்பட்டோர் மதுரை வந்திருந்த நிலையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ரயில்களில் விதிமுறைகளை மீறி சிலிண்டர்கள் எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றம். இவர்கள் எப்படி ரயில் நிலையத்திற்கு சிலிண்டரை கொண்டு வந்தனர், எப்படி இவர்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனா என பயணிகள் விணா எழுப்புகிறார்கள்.
இது குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.