குட்கா மொத்த விற்பனையாளர் காருடன் கைது! குண்டர் சட்டம் பாயும் என எஸ்.பி .ஜெயக்குமார் தகவல் !

குட்கா மொத்த விற்பனையாளர் காருடன் கைது! குண்டர் சட்டம் பாயும் என எஸ்.பி .ஜெயக்குமார் தகவல் !

க.பாலகுரு

திருவாருர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா. குட்கா விற்பனை, மணல் கடத்தல்,  ஆன்லைன் லாட்டரி விற்பனை, சூதாட்டம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நார்கள் மீது தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக இரண்டு நாட்களில் போதை பொருட்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு வேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 13 நபர்கள் மீலும், குட்கா விற்பனையில் ஈடுபட்ட 14 நபர்கள் மீதும் மொத்தம் 23 வழக்குகள் புதில செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய எதிரிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இதில் திருவாருர் தாலுக்கா காவல் சரகத்திற்குட்பட்ட புலிவலம் பகுதியில் குட்கா தொடர்பான சிறப்பு வேட்டையில் ஈடுபட்ட போது செய்யது முகம்மது, பாட்சா காலனி, புலிவலம் எண்பவரின் மளிகை கடையில் விற்பனைக்காக குட்கா பாக்கெட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருவாரூரில் உள்ள ஒரு நபர் முலம் நீடாமங்கலம் பகுதியிலிருந்து குட்கா பாக்கெட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து திருவாருர் தாலுக்கா உதவி ஆய்வாளர்  பாரதநேரு தலைமையிலான போலீசார் மகேந்திரன் (40/24), த/பெ.கண்ணியப்பன். நல்லப்பா நகர் திருவாரூர் என்பவரையும், முனியப்பன் (38/24), த/பெ.கந்தசாமி, பரப்பனமேடு நீடாமங்கலம் என்பவரையும் கைது செய்து  நீடாமங்கலத்தில் உள்ள முனியப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தை தணிக்கை செய்தபோது அவரிடமிருந்து சட்ட விரோதமாக விற்பனைக்காக 18 சாக்கு முட்டைகளில் சுமார் 150 கிலோ குட்கா கைபற்றப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய Maruthi EECO கார் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 மேலும் முனியப்பனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் கருர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும் அவர் நீடாமங்கலம் பகுதியில் தங்கி வாட்டர் பாட்டில், ஊதுபத்தி, பேப்பர் பிளேட் பேப்பர் கப் போன்றவைகளை கடைகளுக்கு மொத்த விற்பனை செய்து வந்துள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே சட்டவிரோத குட்கா விற்பனையில் ஈடுபட்டதற்காக திருவாருர் நகரம் மற்றும் பேரளம் காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.

  இருந்த போதும் அந்தத் தொழிலை அவர் விடவில்லை ஆகவே இவர்களிடமிருந்து விற்பனைக்கு பயன்படுத்திய மாருதி கார் மற்றும் டாட்டா ஏசி வாகனங்கள் இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

 இவர் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தல், பதுக்குதல், விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதால் இவர் மீது இம்முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்கள்.

 சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மேற்கண்ட நபர்களை சிறப்பாக செயல்பட்டு கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா மற்றும் விற்பனைக்காக பயன்படுத்திய வானங்களையும் பறிமுதல் செய்து திருவாருர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  மணிகண்டன், திருவாரூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் D அகிலாண்டேஸ்வரி மற்றும் திருவாருர் தாலுக்கா காவல் உதவி ஆய்வாளர் T.பாரதநேரு, தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர்  வெகுவாக பாராட்டினார்கள்.