ஆளுநரா? எதிர்கட்சித்தலைவரா?துரைமுருகன் பரபரப்பு!

கு.அசோக்,
கவர்னர் எதிர்க்கட்சித்தலைவரை போல் செயல்படுகிறார் - காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திறிகு தர வேண்டிய பாக்கி தண்ணீரை கேட்டு பெறுவோம் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரி ஆகிய இரண்டு ஏரிகளையும் சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது இதனை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மற்றும் மண்டல குழுதலைவர் புஷ்பலதா நீர் வளத்துறை அதிகாரி சண்முகம், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது தாராபடவேடு ஏரியில் அதிக அளவு குப்பைகள் இருந்ததாகவும் அதனை அகற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் மேயரை பார்த்து உங்கள் மாநகராட்சி ஆட்கள் தான் இவ்வளவு குப்பை கொட்டிவிட்டு சென்றனர் என சொன்ன போது சிரிப்பை அடக்க முடியாமல் மேயர் சுஜாதா சிரித்தார்
முன்னதாக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஏரியை சுற்றுலாதளமாக மாற்றுவதற்கான பணிகள் சற்று வேகம் குறைவாக உள்ளது. இன்னும் வேகமாக பணிகள் நடக்க வேண்டும் எனென்றால் மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க வேண்டும்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்கிறது அதில் வழக்கம் போல் என்ன வலியுறுத்தியுள்ளோம் பாக்கி தண்ணீரை தர கேட்போம் தமிழக ஆளுநர் ஒரு மாநிலத்தின் கவர்னர் ஆளூநர் என பெயர் உள்ளது ஆனால் அவர் எங்களுக்கு எதிர்க்கட்சியை போல் நடக்கிறார் கவர்னராக நடக்கவில்லை எதிர்க்கட்சிதலைவராக நடக்கிறார்.
பாஜக குழு அமைத்து பொய் வழக்கில் 450 பாஜகவினரை கைது செய்துள்ளதாகவும் திமுகவினர் மீது நட வடிக்கை எடுக்கவுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு தாரளமாக அவர்களுக்கு அதிகாரம் உள்ளது செய்வார்கள் நாங்கள் போட்ட வழக்குகள் சரி என்றால் சரி என சொல்வோம் என கூறினார்.