பயங்கர தீ விபத்து! 20 லட்சம் நாசம்:- பத்து பேர் உயிர்தப்பினர்!

ஜி.கே.சேகரன்,
குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த மரக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது, அதிர்ஷ்டவசமாக மூன்று குடும்பத்திலிருந்த 10 க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர் 20 லட்சம் மதிப்பிலான மரச்சாமான்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பிரான்ஸ். இவர் வாணியம்பாடி புதூர் அண்ணாநகர் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் மூன்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளா£.¢ அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் பிரான்சிஸ் மரக்கடையையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த மரக்கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் வாணியம்பாடி நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நபர்களை உடனடியாக வெளியேற்றி அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்து மரக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடினர் ஆனால் அதற்குள் தீ கடை முழுவதும் பரவி எரிய தொடங்கியது.
மேலும் ஒரு பகுதி ஷட்டர் பூட்டி இருந்த நிலையில் அதனை ஜேசிபி இயந்திரம் வரவழைத்து ஷட்டரை உடைத்து பின்னர் தீயை அணைத்து போராடினர். இதனை தொடர்ந்து ஆம்பூர், நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் வருவாய் துறை காவல்துறையினர் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.¢ மேலும் மேலும் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் 3 குடும்பத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பத்திரமாக வெளியேற்றியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது
இந்த தீ விபத்தால் மரக்கடையில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான மரச்சாமான்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின.
சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் குடியிருப்பு பகுதிகளில் மரக்கடை எப்படி அனுமதி வழங்கப்பட்டது அனுமதி பெறப்பட்டதா என பிரான்சஸ் இடம் விசாரணை மேற்கொண்ட நிலையில்
இந்த தீவிபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்து நாசாமா போன பிறகு தான் கடமை உணர்வே வரும் போல. அதுக்கு பிறகுதான் அனுமதி பெற்றுள்ளனரா? இல்லையா என்று கிழிக்க துவங்கிவிடுவார்கள் கடமை வீரர்கள்.