அரசு ஊழியர்கள் அடாவடி!

கு.அசோக்,
தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணிகளையும் உடனே நிரப்புதல், ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்குதல், உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர்.
உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர் தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களே கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.