12 ஆம் தேதிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

12 ஆம் தேதிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

எம்.ஏ.கண்ணன்,

 வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது, உள்மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தி:

  தென்கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.7) முதல் ஜன.12-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

  எனினும் உள்மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் பல பகுதிகளில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.

 மேலும் அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும். இதற்கிடையே ஜன.7-இல் குமரிக்கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

 இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அந்த செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.