கடந்த தேர்தலில் சொன்னது போலவே இதுதான் கடைசி தேர்தல் என்று மக்களை ஏமாற்ற பார்க்கிறார் ஏ.சி.சண்முகம்! முன்னாள் அமைச்சர் வீரமணி பேட்டி!

கடந்த தேர்தலில் சொன்னது போலவே இதுதான் கடைசி தேர்தல் என்று மக்களை ஏமாற்ற பார்க்கிறார் ஏ.சி.சண்முகம்! முன்னாள் அமைச்சர் வீரமணி பேட்டி!

கு.அசோக்,
 வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  வீரமணி, ஏசி சண்முகம் 2019 தேர்தலில் கூட இதுதான்  நான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று சொன்னார். இப்போதும் அதையே சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்,  அவர் துரோகி என்றும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்றும்  பேட்டி.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி  அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி அவர்களின் அறிமுக கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேமுதிக, எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட  நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் வீரமணியிடம் பத்திரிகையாளர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏசி சண்முகம் அவர்களுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டது என்று பரப்புரையில் பேசி வருவதாக கேட்டதற்கு, அதிமுக தொண்டர்களை பார்த்து துரோகி என்று சொல்லும்   அளவிற்கு      ஏ

சி சண்முகம் தான் உண்மையான துரோகி.

எம்ஜிஆர் ஆல் உருவாக்கப்பட்ட இரட்டை இலையால் இந்த நாட்டிற்கு அடையாளம் காணப்பட்டவர்.

முதலமைச்சரும், 33 அமைச்சர்களும் ஒரு தனிப்பட்ட மனிதர் ஏசி சண்முகத்துக்காக தேர்தல் களத்திற்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். அதற்கு பேர் தான் துரோகமா? அல்லது அதையெல்லாம் மறந்து எங்களை குறை சொல்கிறாரே அது துரோகமா?

ஏ சி சண்முகத்திற்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்.

அமைச்சரின் துரைமுருகன் மகன் கதிர்  ஆனந்துக்கு ஐடி ரைட் நடத்தி கைது செய்ய திட்டம் நடந்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளதாக செய்தியாளர்கள்  கேட்டதற்கு,

டெல்லியில் உள்ள முதல்வர் கெஜ்ரிவாலுக்கும்  இது நடந்துள்ளது.எனக்கும் ஐ டி ரெய்டு நடந்து இருக்கு. அதனை  சட்டபூர்வமாக  சந்தித்திருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர்   வீரமணி தெரிவித்தார்.

ஏசி சண்முகம்  கடந்த முறை தேர்தல் நிற்கும்  போது எனக்கு இது கடைசி தேர்தல் நான் மீண்டும் தேர்தலில் நிற்க மாட்டேன் என்று கூறினார் ஆனால் மீண்டும் தேர்தலில் நின்று இருக்கிறார்.

அவருக்கு மக்கள் நலனில்  அக்கறை இல்லை எப்படியாவது மத்திய அமைச்சராகி மக்களை மறந்துவிட வேண்டும் என்பது அவருடைய எண்ணம். அவரால் ஒரு 100 மீட்டர் நடக்க முடியுமா என்று  ‌  கூறினார்