விவசாய கடனில் மோசடி! கூட்டுறவு பணியாளர்கள் நான்கு பேர் கைது!

விவசாய கடனில் மோசடி! கூட்டுறவு பணியாளர்கள் நான்கு பேர் கைது!

கு.சக்திவேல்.

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்பணியாளர்களான,அள்ளிக்கொண்டாபட்டுஜெய்சங்கர், தச்சம்பட்டு சங்கரமூர்த்தி பெரிய கள்ளப்பாடி பிரதீஷ் குமார் அள்ளிக்கொண்ட அருணகிரி ஆகியோர் சங்கத்தில் பணிபுரிந்த போது விவசாய கடன் மற்றும் பணியாளரின் சம்பள கணக்குகளில் பொய் ஆவணங்கள் தயார் செய்து சுமார் 8.30 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பிறகு திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின்படிநால்வரையும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

இது சம்பந்தமாக திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.