மக்கள் பிச்சைக்காரர்களாகவே இருக்கிறார்கள்! சொல்கிறார் மன்சூர் அலிகான்!!

மக்கள் பிச்சைக்காரர்களாகவே இருக்கிறார்கள்! சொல்கிறார் மன்சூர் அலிகான்!!

ஜி.கே.சேகரன்,

திமுக, அதிமுக என யாரு ஆண்டாலும் மக்கள் ஏழ்மையாகவும் பிச்சைக்காரர்களாகவே இருக்கின்றனர் என மன்சூர் அலிகான் சொன்னார்.

வேலூர் மாவட்டம்,வேலூரில் உள்ள மீன் மற்றும் இறைச்சி மார்கெட்டில் நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கழகத்தின் தலைவருமான மன்சூர் அலிகான் மீனை வெட்டி உற்சாகமானார்.

பின்னர் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறுகையில் எனக்கு யாரும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் தான் இங்கு வெற்றி பெறபோகிறேன்.

பல அமைப்புகள்மக்கள்ஆயிரக்கணக்கானோர் கேட்டு கொண்டதற்கு இணங்க இங்கு போட்டியிடுகிறேன்.

திமுக,காங்கிரஸ், அதிமுக மாறி மாறி நாட்டை பல ஆண்டுகளாக ஆண்டனர். ஆனால் மக்கள் பிச்சைகாரர்களாகவே இருக்கின்றனர்.

மோடி நடத்துவது நாடக தேர்தல் மோடி எல்லாத்தையும் முன் கூட்டியே செய்துவிட்டுதான் தேர்தலை நடத்துகிறார்.

ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன், ஆளுநரே தேவையில்லை. ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்று.

ஓட்டு மெஷினை எதிர்த்து யாரும்பேசவில்லை, நான் பாராளுமன்றம் சென்றால் வாக்கு சீட்டு மூலம் தேர்தலை நடத்த சொல்லுவேன்.

இது போலி ஜனநாயகம், ஏமாற்று வேலை பாஜகவுக்கும் அதேபோல் அதிமுகவுக்கும் நான் பி டீம் இல்லை.

எ டூ இசட் நான் தான், மக்களிடம் சின்னத்தை கொண்டு சென்று பெரிய அளவில் பிரளயத்தை ஏற்படுத்துவேன்.

திமுக அண்ணா சின்னத்தை வைத்து ஏமாற்றி குடும்பத்தை வளர்க்கின்றனர். இப்படி இருக்கும் போது தனி ஒருவனாக போராடுகிறேன் ஏ டீமா பீ டீமா என்பது பின்னர் தெரியும்.

மலைகளை பசுமையாக்குவேன் ஏரிகளை அதிகம் இம்மாவட்டத்தில் அமைக்க வேண்டும், துரைமுருகன் நீர்வளத் துறை அமைச்சராக உள்ளார் இங்கு நிறைய ஏரிகளை அமைத்திருக்கலாம்... என சொல்லிக்கொண்டே  போனார் மன்சூர் அலிகான்.

இந்த நிலையில் செய்தியாளர்கள், சார் போதும்  முடித்துக் கொள்ளலாம் என்று பேட்டியை முடித்து வைத்தனர்.

  பேட்டி:நடிகர் மன்சூர் அலிகான் (இந்திய ஜனநாயக புலிகள் கழகம்)