வரிங்களா... ஒரே மேடையில் விவாதிக்கலாம்?எம் பி ஜெகத்ரட்சகனுக்கு சவால் விடும் பாமக வேட்பாளர் பாலு!

வரிங்களா... ஒரே மேடையில் விவாதிக்கலாம்?எம் பி ஜெகத்ரட்சகனுக்கு சவால் விடும் பாமக வேட்பாளர் பாலு!

ஜி கே சேகரன்,

மக்களுக்கு என்ன செய்தார் என்பதை  நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் என்னுடன் விவாதிக்க தயாரா?   அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின்  வேட்பாளர் பாலு  கேள்வி?

 அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர்மாவட்டம்,காட்பாடி கரசமங்கலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்குரைஞர் பாலு அறிமுக கூட்டமானது நடைபெற்றது.

பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் நடந்த இதில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பார்த்திபன் ,ஞானசேகர்,ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாமக மாவட்டதுணை தலைவர் சம்பத்,மாவட்ட தலைவர் வெங்கடேசன்,மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம்,சமூகநீதிபேரவை செயலாளர் சக்கரவர்த்தி,வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் அ,ம.கிருஷ்ணன் மற்றும்  வேட்பாளர் பாலு உள்ளிட்டோரும்  பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் வேட்பாளர் வழக்குரைஞர் பாலு பேசுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் இதுவரையில் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை.

நான் வெற்றி பெற்றால் நகரி to திண்டிவனம் ரயில்பாதை பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன்,

அரக்கோணத்தில் ரயில்கள் அனைத்தும் நின்று செல்ல வழி வகுப்பேன்.

அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துவேன்.

மக்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பேன்.

மக்களுக்கு ஜெகத்ரட்சகன் என்ன செய்தார் என்பதை  என்னுடன் பொதுமேடையில் வாக்காளர்கள் முன்னிலையில் அவர் விவாதிக்க தயாரா?

நாடாளுமன்ற உறுப்பினர் என்கின்ற பதவி மிகவும் உயரிய பதவி அந்த பதவியை ஜெகத்ரட்சகன் அவரது சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்.

இலவசமாக விமானத்தில் செல்வதற்கும், டெல்லியில் இலவசமாக தங்கிக் கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டார் என பேசினார்.

முன்னதாக,சோளிங்கர்,ராணிப்பேட்டை,ஆற்காடு வாலாஜா ஆகிய பகுதிகளிலும் பாமக வேட்பாளர் பாலு நிர்வாகிகளை சந்தித்தார்.

குறிப்பு:-அரக்கோணம் தொகுதியில் சிட்டி எம். பி. ஆக ஜெகத்ரட்சகன் உள்ளார்.