போராடிய மாற்றுத் திறனாளிகள் கைது!

கு.அசோக்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்று திறனாளிகளை அந்தந்த மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம்,
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் கைது
மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர ஊதியத்தொகை 1500 மட்டும் இரண்டாயிரத்தில் இருந்து ஊர்த்தி வழங்க வேண்டும்.
தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்று கோரியும் , 2014ஆம் ஆண்டு அறிவித்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஆந்திரா மாநிலத்தில் லேசான ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 6000 ரூபாயும் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 10,000 ரூபாயும்,முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 15,000 ரூபாயும் மாதாந்திர உதவித்தொகையாக ஆந்திர அரசு வழங்கி வருவதைப் போன்று தமிழக அரசும் வழங்க வேண்டுமென வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இப்பொழுது திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டம்,
ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
இராணிப்பேட்டை ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கா சங்கம் சார்பில் சிறை நிரப்பு போராட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி தர வலியுறுத்தியும், 100 நாள் வேலை வாய்ப்பினை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வழங்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தமிழக அரசுக்கு கோஷங்களாக எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியதை தொடர்ந்து அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அங்கிருந்து போராட்டத்தை முடித்துவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்இதன் காரணமாக ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல் நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
திருப்பத்தூர்£ மாவட்டம்,
பாரத ஸ்டேட் வங்கி எதிரில் நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகளின் உதவி தொகை உயர்த்தக்கோரியும் சிறை நிரப்பும் போராட்டம்-100க்கும் மேற்பட்டோர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ரங்கசாமி, காசி, காமராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்களில் 100 க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.