தில்லாலங்கடி பல்கலைக்கழகம்! பாஸ் ஆன கூட தேர்வு எழுதணுமாம்!

ஜி.கே.சேகரன்,
திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாள் 2021 ஆம் ஆண்டுடையதை அப்படியே காப்பியடித்து தற்போது வழங்கியதால் குளறுபடி - பாலியல் புகாருக்கு உள்ளானவர் தேர்வு கட்டுபாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி தமிழக முதல்வருக்கு புகார் கடிதம் - ஆம்பூர் தனியார் கல்லூரியில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் மறு தேர்வு எழுத வேண்டுமென உத்தரவிட்டு கட்டாய படுத்தி தேர்வு எழுத வைத்ததால் அதிர்ச்சி கட்டணங்கள் உயர்த்தி கொள்ளை ஊழல் முறைகேடுகள் பல்கலைகழகம் மீது குற்றச்சாட்டு
வேலூர்மாவட்டம், சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுபாட்டில் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 70 -க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் இதன் கட்டுபாட்டில் செயல்பட்டு வருகிறது இந்த பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து குளறுபடிகளும் முறைகேடுகள் மதிப்பெண் பட்டியல் குளறுபடிகளும் நடக்கிறது.
இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிகக்படுகின்றனர், இதில் இப்பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி கணிதம் மூன்றாவது செமஸ்டர் தேர்வு வினாத்தாள் 2021 ஆம் ஆண்டு வந்த வினாத்தாளை அப்படியே காப்பியடித்து ஆண்டை மட்டூம் மாற்றி 2023 என மாணவர்களுக்கு வினாத்தாளை வழங்கியுள்ளனர் இது மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வினாத்தாளையே காப்பியடித்துள்ளனர் மேலும் இப்பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்களுக்கு உள்ளானவர்களுக்கு துணை பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுபாட்டு அலுவலர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது துணை வேந்தர் பாலியல் புகாரில் சிக்கியவர்களுக்கு பதவி வ்ழங்கியுள்ளது மாணவர்கள் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதைவிட கொடுமை ஆம்பூர் மஸ்ருல்லும் கல்லூரியை சேர்ந்தவர்களில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் மறு தேர்வு எழுத வேண்டுமென கட்டாயபடுத்தி இப்பல்கலைகழகம் தேர்வு எழுத வைத்துள்ளது. தேர்வு கட்டணமும் பல மடங்கு உயர்த்தியுள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இணைய வழி என் மதிப்பீடு முறை இப்பல்கலைக்கழகம் அவசர அவசரமாக முறையின்றி கொண்டு வருவதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது தொடர்ந்து இப்பலைக்கழகம் பல முறைகேடுகளிலும் குளறுபடிகளிலும் சிக்கி தவிக்கிறது உடனடியாக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும் பேராசிரியர்களும் கோருகின்றனர்.