ஜெயலலிதாவின் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் ஏல பணத்தில் கழிவறைகள் கட்ட நீதிபதி யோசனை! வாயை மூடிக்கொண்டிருக்கும் அதிமுகவினர்!

ஜெயலலிதாவின் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் ஏல பணத்தில் கழிவறைகள் கட்ட நீதிபதி யோசனை! வாயை மூடிக்கொண்டிருக்கும் அதிமுகவினர்!

 எஸ்.செல்வராஜ்,

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடும்போது கிடைக்கும் பணத்தில், தமிழ்நாட்டில் இலவச கழிவறைகள் கட்டலாமே" என்று தமிழ்நாடு அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மோகன் யோசனை குறியிருக்கிறார்.

  வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துகள் மதிப்பீட்டு அறிக்கையை பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த நிலையில், நீதிபதி மோகன் மேற்படி கூறிய யோசனை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  பெங்களூரு  உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு வழக்கே முடிவுக்கு வந்துவிட்டது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை கர்நாடக நீதிமன்றம் ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.

  இது தொடர்பான வழக்கின் போது தான் நீதிபதி மோகன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடும்போது கிடைக்கும் பணத்தில் அபராதத் தொகை, நீதிமன்ற செலவு தொகை போக, மீதமுள்ள பணத்தில் தமிழ்நாட்டில் இலவச கழிவறைகள் கட்டலாமே" கருத்தை தெரிவித்துள்ளார்.

  இதற்கு தமிழக சட்டத்துறை அளித்த பதிலில், "இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளபடிதான் செயல்பட முடியும். அதை விடுத்து வேறு உத்தரவு பிறப்பிக்க முடியாது" என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் இதற்கு பதிலளித்தார்.

 ஆனால் மூச்சுக்கு முப்பது முறை அம்மா, இதய தெய்வம், கட்சி எனக்கு தான் உனக்குத்தான் என்று போட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் அதிமுக காரர் ஒருத்தர் கூட இது தொடர்பாக வாயை திறக்கவில்லை.