அழிக்க அழிக்க ஊற்றெடுக்கும் கள்ளச்சாராயம்!

கு.அசோக்,
எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் பகுதியாக வேலூரை அடுத்துள்ள அல்லேரி மலை கிராமம் பார்க்கப்படுகிறது.
அப்படியிருக்க அங்கு கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
வேலூர்மாவட்டம், வேப்பங்குப்பம் மலைப்பகுதியில் காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான காவல்துறையினர் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மலைப்பகுதியில் 60 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 200 கிலோ வெல்லம் ஆகியவைகளை பறிமுதல் செய்ததுடன் சாராயம் காய்ச்சிய அணைக்கட்டை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சிவசக்தி ஆகிய இரண்டு பேர் பிடிபட்டனர்.
அவர்கள் மீது, வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல அல்லேரி மலைப்பகுதியில் ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீசார் 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்.
அங்கு லாரியின் பழைய டியூபில் கள்ளச்சாராயம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதே போல மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்த சோதனையில் 8 லிட்டர் கள்ளச்சாராயம் 43 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.