ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

 தே.பிரகாஷ்,

 இன்ஸ்ட்ராகிராமில் பதிவேற்றுவதற்காக ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த மனைவியின் கையை அவரது கணவர் வெட்டினார். இந்நிலையில் கணவன் கைது செய்யப்பட்டார் - அரசு மருத்துவமனையில் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 வேலூர் மாவட்டம், குடியாத்தம், பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி( வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார்.

 இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

 இதனிடையே நேற்று இரவு ரேவதி ரீல்ஸ் எடுத்ததுடன்,வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சேகர் தன் மனைவியை குடிக்க தண்ணீர் கேட்டிருக்கிறார். அதை அவரது மனைவி காதில் போட்டுக்கொள்ளவில்லை.  எனவே  ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது இதனையடுத்து இருவர்களுக்கும்  வாய் தகராறு ஏற்பட்டது.

 இதில் ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையையால் ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார். இதில் கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.