சந்திரபாபு நாயுடுகாரு ஆந்திராவில் ஆட்சியை பிடிப்பாரா? சந்தன வீரப்பன் படத்துடன் சித்தூர் வேட்பாளர் பிரச்சாரம்!

சந்திரபாபு நாயுடுகாரு ஆந்திராவில் ஆட்சியை பிடிப்பாரா? சந்தன வீரப்பன் படத்துடன் சித்தூர் வேட்பாளர் பிரச்சாரம்!

ம.பா.கெஜராஜ்,

ஆந்திர மாநிலத்தில் மே மாதம் 13 ஆம் தேதி மக்களவைக்கான வாக்குபதிவு நடைபெறவிருக்கிறது.  அதனுடன் சேர்த்து சட்டபேரவைக்கான வாக்குபதிவும் நடைபெறும்.

 அம் மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி சிட்டிங் சி.எம். ஆக உள்ளார். ஆட்சி அதிகாரம், காபந்து முதலமைச்சர் என்கிற கெத்தில் அவர் இந்த தேர்தலை சந்திக்கிறார். எப்படியும் தமக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறவைப்பார்கள் என நம்பி தனித்து போட்டியிடுகிறார். அவர் எந்த கட்சியினுடனும் கூட்டணி வைக்கவில்லை.

 ஆனால் மக்கள் மனதில் ஜெகன் மோகனுக்கு அவ்வளவாக நல்ல பெயர் இல்லை. திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏகப்பட்ட கமிஷன் பிரச்சனை இருப்பதால் மாநிலம் முழுவதிலும் பணிகள் சரிவர நடைபெறவில்லை. அப்படியே நடந்த பணிகளும் சொதப்பலாகவே உள்ளது.

  ஜெகன் மோகன் சிஎம் ஆக இருந்தாலும் கூட அதிகாரிகளும் காண்டிராக்டர்களுமே ஆட்சியை நடத்துகின்றனர் என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு விட்டது. சாமன்ய மக்கள் எளிய வகையில் அதிகாரிகளை அணுக முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

 மாநில அரசின் பல துறைகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பாமல் அவர்களை வைத்து அரசு இயந்திரத்தை இயக்குவதே இவ்வளவுக்கும் காரணம். பழம் திண்று கொட்டை போட்ட அப்படிப்பட்ட ரிடையர்டு டிக்கெட்டுகள் ஊழல் செய்வது எப்படி என்பதை கற்றறிந்து செயல்படுவதால் மக்களுக்கு நல திட்டங்கள் போய் சேரவில்லை. 

இது ஜெகனுக்கு பெரிய அடியைக் கொடுக்கும்.

  அதுமட்டுமின்றி அவரது தங்கை ஷர்மிளா ஆந்திராவின் காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கிறார். இவர் ஒய். எஸ். ஆர். காங் கட்சியின் வாக்குகளை பிரித்து மேய்ந்துவிடுவார் என்பதில் அய்யம் வேண்டாம். அதே போல் போல் ஷர்மிளா கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட சில வாக்கு வங்கி கட்சிகளை கூட்டணி கண்டு தேர்தலை சந்திக்கிறார். அவரது பிரச்சாரம் மிகவும் பரபரப்பாக இருக்கிறது.

 ஆனால் அண்ணன் ஜெகனை விமர்சிப்பதை காட்டிலும் ஜெகன் கட்சியின் வேட்பாளர்களை விளாசிக்கொண்டிருக்கிறார்.  இந்த சூறாவளி பேச்சில் சிக்கியவர் அமைச்சர் ரோஜா.

 இதே நேரத்தில் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான நரா.சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற முஸ்தீபில் பலமான கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சியுடன், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, பாஜக போன்ற கட்சிகள்  கூட்டணி வைத்திருக்கின்றன.

 அதில் ஆந்திராவில் உள்ள 175 சட்டபேரவை தொகுதிகளும் 25 எம்பி தொகுதிகளும் உள்ளன. அவற்றில் பவன் கல்யாணுக்கு 25 எம் .எல் .ஏ. சீட்டும், எம்பி க்கு 3 சீட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல் பாஜகவுக்கு 10 எம் .எல் .ஏ சீட்டும், 3 எம்பி சீட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.

 சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் ஆந்திராவில் ஏகப்பட்ட சலுகைகளை மக்களுக்கு வாரி வழங்கினார். அவர் காலத்தில் தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. கறுப்பு வெல்லத்துக்கு கூடுதல் கொள்முதல் விலை கொடுத்தார் என மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது.

 ஆனாலும் பாஜகவுடனான கூட்டணியை ஆந்திர மக்கள் அவ்வளவாக விரும்பவில்லை. அதே மனநிலைதான் சந்திரபாபு நாயுடுவுக்கும் இருக்கும். ஆனால் என்ன செய்வது வழக்குகள் கண் முன் வந்து செல்கிறதே.  

 இந்நிலையில் நாயுடு மீண்டும் குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதில் அவர் 8 வது தடவையாக போட்டியிடுகிறார் என்பது நினைவுகூறத்தக்கதாகும்.  நாயுடுவுக்கு அந்த தொகுதியில் வாக்குகளை அள்ளிக் கொடுப்பதே தமிழர்கள்தான். ஆகவே அங்கு அவர் சேப்டியாக உள்ளார். நாயுடுவை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங் வேட்பாளர் பரத் என்பவர் போட்டியில் உள்ளார். அவர் அங்கு எம் .எல்.சியாகவும் பதவில் இருக்கிறார்.

 கிழக்கு கோதாவரி மாவட்டம், பிட்டாபுரம் சட்டமன்ற தொகுதியில் ஜனசேனா கட்சியின் தலைவரான நடிகர் பவன் கல்யாண் கிளாஸ் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து வங்கா கீதா என்கிற பெண் வேட்பாளர் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் ஃபேன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

  இந்நிலையில் சிட்டிங் சி.எம் ஜெகன்மோகன் ரெட்டி அவரது சொந்த கிராமமான புலிவந்தலா தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பாக பி.டெக் ரவி என்பவர் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

 அடுத்ததாக மங்களகிரி சட்டமன்ற தொகுதியில் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் இரண்டாம் முறையாக போட்டியிடுகிறார்.ஏற்கனவே அவர் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது எம்எல்சி ஆக உள்ளா£.¢

 அவரை எதிர்த்து நான்கு பேரை மாற்றி மாற்றி வேட்பாளர்களாக அறிவித்த ஜெகன் கட்சி தற்போது ஒரு பெண் வேட்பாளரை நிறுத்துகிறது.

  இந்நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா கடப்பா தொகுதியில் எம்பியாக போட்டியிடுகிறா£.¢ அவரை எதிர்த்து அவினாஷ் ரெட்டி என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இவர் ஷர்மிளாவின் சித்தப்பாவை கொலை செய்துவராவார்.

  நகரி சட்டமன்ற தொகுதியில் ரோஜா நான்காவது முறையாக போட்டியிடுகிறார்

முதன் முதலில் அவருக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பாக நகரில் சீட்டு கொடுக்கப்பட்டபோது ஏற்கனவே அதே தொகுதியில் பலமுறை எம் .எல் .ஏ.வாக இருந்த துரை¢சாமி ராஜு என்பவர் பிரச்சனை செய்தார். எனக்கு சீட்டு கொடுக்கவில்லை என்றால் ரோஜாவை ஊருக்குள் விடமாட்டேன் என்று அடித்து விரட்டினார்கள். அந்த காட்சிகள் சினிமாவில் சண்டை சீனை பார்ப்பது போல இருந்தது

அந்த தடவை ரோஜா தோற்கடிக்கப்பட்டார்.

  அதன் பிறகு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வெளியேறிய ரோஜா ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர் ரெட்டி உயிருடன் இருந்த போது அவரது கட்சியில் இணைந்துக் கொண்டார். இரண்டு தடவை நகரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அந்த வகையில் சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக விளங்குகிறார் அவர் இம்முறை மீண்டும் நகாயில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

 அவரை எதிர்த்து பானு பிரகாஷ் என்பவரை தெலுங்கு தேசம் கட்சி நிறுத்தியிருக்கிறது மாஜி மந்திரி முத்துகிருஷ்ணன் என்பவரின் மகனான இவர் கடந்த தேர்தலில் ரோஜாவுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர். அதற்கு இம்முறை அவர் ரோஜாவை பழிவாங்குவார் என்று நிலவரம் உள்ளது.

 சித்தூர் சட்டமன்ற தொகுதியில் சந்தனமரக் கடத்தல் மன்னன் விஜய் ஆனந்த் ரெட்டி ஒஎஸ்ஆர் காட்சியில் போட்டு இருக்கிறார்.

  அவர் மீது சந்தன கட்டை கடத்தல் வழக்கு மட்டும் 15க்கு மேல் உள்ளது. சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் படத்தை தமது பிரச்சார பேனரில் வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் மீது சாராயக் கடத்தல் வழக்கும் உண்டு. அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஆட்டையை போட்டவர் இவர். அவரை தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக ஜெகன்மோகன் நாயுடு என்பவர் எதிர்க்கிறார். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

   இவர் நேர்மையானவர் இவர் மீது எந்த வழக்கும், எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஜெகன் மோகன் நாயுடுவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.,சிகே பாபுவின் ஆதரவு உள்ளது.

  சித்தூர் சட்டமன்ற தொகுதியை பொருத்த மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனிவாசலு என்பவர் எம். எல். ஏ. வாக இருந்தார்.  அவருடைய நடவடிக்கைகள் மக்களுக்கு எதிரானது என்பதால் அவர் இம்முறை தொகுதி மாறி திருப்பதிக்கு ஓடி விட்டார்.

 கல்வீச்சில்  தொடங்கிய பிரச்சாரம் தற்போது சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாகவே மாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் அண்ணனும் தங்கையும் இணைந்துவிடுவார்கள் என்று பேசப்படுகிறது.