ஊரை தேடி வரும் உயிரிங்கள்!

கு.சக்திவேல்,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த ஆண் புள்ளிமான் நாய்கள் கடித்து உயிர் இழப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் வன விலங்குகளை பாதுகாக்க செங்கம் வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என கிராவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி விவசாயநிலம் மற்றும் ஊருக்குள் வருவதால் சிலர் வேட்டையாடிவிடுகின்றனர்.
அதே போல் தெரு நாய்கள் கடித்தும் வனவிலங்குகள் உயிரிழந்து வருகிறது. இந்நிலையில் அதை தடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.