எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பேரில் தண்ணீர் பந்தல் திறப்பு!

எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பேரில் தண்ணீர் பந்தல் திறப்பு!

ஜி.கே.சேகரன்,

 கோடை காலம் தொடங்கியுள்ளதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தலை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சுகுமார் அதிமுக தொண்டர்களுடன் இணைந்து திறந்து வைத்தார்.

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்படும் மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டுமென அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தி இருந்தார். 

 அந்த வகையில், மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்து தொடர்ந்து ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துக்கடை, வாலாஜாப்பேட்டை, வி.சி.மோட்டூர் ஆகிய பேருந்து நிலையங்கள், ஆற்காடு, பைபாஸ் பூட்டுத்தாக்கு ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் தண்ணீர் பந்தலை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து திறந்து வைத்தார். 

அப்போது, பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர் , ஆரஞ்ச், வெள்ளேரிபழம், குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல் நிகழ்ச்சியினை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் துவக்கி வைத்தனர்.

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி மற்றும் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி, இளநீர் வாழைப்பழம்,மோர்,பழஜுஸ் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

அப்போது அதிமுக வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் பசுபதி,,உதயேந்திரம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சாம்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்