கீழ்பகுதிகளில் இருப்பதினால் நிலைமைகளை ஆராய்ந்து காரியங்களை சாதிக்க வேண்டும்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
கீழ்பகுதிகளில் இருப்பதினால் நிலைமைகளை ஆராய்ந்து காரியங்களை சாதிக்க வேண்டும் முல்லை பெரியாறில் உள்ள பேபி அணையின் பழுதை நீக்குவதற்கு உச்சநீதிமன்றத்தில் சட்டபடி அனுமதி பெற்றுதான் செய்வோம்- சீர் செய்த பின்னர் 152 அடியாக உயர்த்துவோம் - தமிழகம் முழுவதும் ஏரிகளில் விவசாயிகள் மண் எடுப்பதில் விவசாயிகளின் பெயரில் வேறு பெயரில் எடுப்பதால் மாநில முழுவதும் அதனை நிறுத்திவிட்டோம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உல்ள கரசமங்கலத்தில் பனை விதை நடும் பணி துவங்கியது.இதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி சட்டமன்ற உறுப்பினர் அமுலு, காட்பாடி ஒன்றிய குழுதலைவர் வேல்முருகன், கரசமங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் முதலமைச்சர் கோப்பைகான போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. இதில் வென்றவர்களை வாழ்த்தி அமைச்சர் பேசினார் அவர்களுக்கு பரிசுகள் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பேபி அணையை கண்காணிப்பு குழு பார்வையிட்டுச் சென்றுள்ள நிலையில், பராமரிப்பதற்காக அனுமதி ஏதாவது தந்தார்களா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,பேபி அணை தொடர்பாகஉச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது இப்பொழுது உள்ள நிலை 142 அடி வரை தண்ணீர் உயர்த்தலாம்.
பேபி அணையை பலப்படுத்தினால் 152 அடி வரை தண்ணீரின் அளவை உயர்த்தலாம். பேபி அணையை பலப்படுத்தினால் எந்த பாதிப்பும் இல்லை. அந்த அணையின்அருகில்15 மரங்கள் இருந்த நிலையில் தற்போது ஏழு மரங்கள் தான் உள்ளது.
அரை மணி நேரத்தில் அந்த மரங்களை வெட்டி எடுத்து விடலாம். நம் எல்லையை ஒட்டி தான் மரங்கள் உள்ளது. ஆனால் அது பல பிரச்சினைகளை உருவாக்கும். அப்பிரச்சனையை சட்டப்படி சந்திக்க உச்சநீதி மன்றத்தில் எடுத்துக் கூறியும் அதை இன்னும் வெட்டப்படவில்லை.
சிறுவாணி அணையை கட்ட கேரள அரசுக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கவில்லை என்றார்.
ஆனால் கேரளா அரசு மத்திய அரசிடம் அனுமதி பெறுவோம் என்று கூறியுள்ளார்களே? எனசெய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,மேல் பகுதியில் அவர்கள் இருப்பதினால் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்.
நாம் கீழ்பகுதிகளில் இருப்பதினால் நிலைமைகளை ஆராய்ந்து காரியங்களை சாதிக்க வேண்டும். விவசாயிகள் ஏரியில் மண் எடுப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்படுமா?என்ன செய்தியாளர்கள் கேட்டனர்.பதிலளித்த அமைச்சர்,விவசாயிகள் மண் எடுத்துக் கொள்வதில் நான் வரவேற்கிறேன். ஆனால் விவசாயிகள் என்ற போர்வையில் ஒரு லாரிக்கு பதில் 20 லாரியை லாரியில் மண் எடுக்கின்றார்கள்.
மனசாட்சி இல்லாமல் மண் எடுக்கிறார்கள், குறிப்பிட்ட அளவு தான் மண் எடுக்க வேண்டும்.
ஆனால் பெரும் பகுதியில் மணலைத் தான் தோண்டி எடுக்கிறார்கள்.நீர்நிலைகளை மண் எடுக்கும்போது ஒரே சமமாக இருக்க வேண்டும். ஆனால் மண் எடுப்பவர்கள் கிணறு போல நோண்டி விடுகிறார்கள்.
ஆனால் தான் ஏரியில் மண் எடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மீண்டும் மண் எடுப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
பருவமழை தொடங்க உள்ள நிலையில்தண்ணீர் தேங்காதவாறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன செய்தியாளர்கள்கேட்டனர்.அதற்கு பதில் அளித்த அமைச்சர்,கடந்த காலங்களில் எந்தெந்த இடத்தில் இத்தகைய போக்கு இருக்கிறதோ அவை எல்லாம் கண்டுபிடித்து அந்தந்த துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு பலமுறை ஆய்வு செய்து உள்ளார்கள்.
தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த முறை அவ்வளவு சேதாரத்தை ஏற்படுத்தாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.