வாணியம்பாடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வலையாம்பட்டு, கிரி சமுத்திரம், பெருமாள் பேட்டை, கொத்தகோட்டை, மதனஞ்சேரி, மேட்டுப்பாளையம் என பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஓரிரு தினங்களாக தூரலுடன் காணப்பட்டு வந்த மழை திடீரென வலுவடைந்து கனமழையாக பெய்தது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்தனர்.
மேலும் திடீரென பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.