ஊராட்சி செயலாளரை தாக்கிய கவுன்சிலர்! மனைவிக்கு போஸ்டிங் சம்பவம்!

கு.அசோக்,
வார்டு கவுன்சிலர் ஊராட்சி செயலாளரை தாக்கியதால் பரபரப்பு காவல்நிலையத்தில் அரசு ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தபின்னர் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியம் ரெண்டாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த ஆறாவது வார்டு உறுப்பினர் சரவணன் என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக கணினி பணியில் அவரது மனைவியை பணியமற்ற தீர்மானம் நிறைவேற்றி பணி அமர்த்த வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு ஊராட்சி செயலாளர் ஏற்கனவே காலி பணியிடத்தை நிரப்பியதாகவும் உங்களது மனைவி பணியாமத்த முடியாது எனக்கு கூறியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திர மடைந்த சரவணன் கூட்டம் நடத்து விடாமல் ஊராட்சி செயலாளரை தாக்கினார்.
இதில் ஊராட்சி செயலாளருக்கு இரண்டு பல் உடைந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா அவர்கள் சோளிங்கர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யக்கோரி புகார் மனு அளித்தார். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 30 க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி செயலாளரை கொலை வெறியுடன் தாக்கிய வாது உறுப்பினரை கைது செய்ய வலியுறுத்தி கன்னட போராட்டம் செய்தனர்.