ஒப்பந்தம் செய்த ஆறு மாதங்களில் ரூ9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொழிற்சாலை! 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு! அடிக்கல் நாட்டுவிழாவில் முதலமைச்சர் பேச்சு!

கு.அசோக்,
பனப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் டாடா கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் - வாகனங்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு தான் நம்பர் ஒன் இந்தியாவின் பெரிய பொருளாதாரமாக தமிழகம் விளங்குகிறது தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்த சமூக நீதி வளர்ச்சி பெண்கள் முன்னேற்றம் சமத்துவம் போன்ற ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் தனித்து நிற்கிறது முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
இராணிப்பேட்டைமாவட்டம்,பனப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 நபர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் டாடா,கார் தொழிற்சாலைக்கு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்லை நாட்டினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப்பட்ட ஆறு மாதத்திற்குள் இது செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அண்மையில் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு 19 நிறுவனங்களுடன் ரூ.7616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப, ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், எஃகு, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகன உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளில் உலகளவில் சிறப்புடன் செயல்பட்டு வரும் டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய அதிநவீன மோட்டார் வாகன உற்பத்தி ஆலையை இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் அமைக்கிறது.
இத்திட்டத்தில், 100 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு வாகனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
இவ்வாண்டு மார்ச் மாதம் இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப்பட்ட ஆறு மாதத்திற்குள், இத்திட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களான டிசிஎஸ், டைடன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ் தாஜ் ஹோட்டல்கள் ஆகியவை ஏற்கெனவே தமிழ்நாட்டில் தடம் பதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் முதல்வர் மு,க.ஸ்டாலின் பேசுகையில், டாடா குழும நிறுவனங்களீல் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அது வளர்ந்து மென் மேலும் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் நாளாக திகழ்கிறது.
ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு மூலம் 5 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள். 1973 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் ராணிப்பேட்டையில் முதற் சிப்காட் துவங்கினார்.50 ஆண்டுகள் கடந்து இன்று பல நிறுவனங்கள் உள்ளது. தமிழ்நாடு வாகன உற்பத்தியின் சிறந்த டாடா போன்ற தொழிற்சாலைகள் இங்கு உள்ளது. மொத்த மின் பாகங்களும் வாகனங்களுக்கு தமிழ்நாடு தான் உற்பத்தி செய்கிறது.
வாகனங்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு தான் நம்பர் ஒன் இந்தியாவின் பெரிய பொருளாதாரமாக தமிழகம் விளங்குகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்த சமூக நீதி வளர்ச்சி பெண்கள் முன்னேற்றம் சமத்துவம் போன்ற ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் தனித்து நிற்கிறது. 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக தமிழ்நாட்டை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
10 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்யப்பட்டு 31 லட்சம் பேருக்கு மறைமுக நேரடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம்.
முதலீடுகளை ஈப்பது மட்டுமல்ல அதனை செயல்படுத்துவது சான்றுதான் இந்த விழா. 6 மாதங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இன்று டாடா தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, டாடா நிறுவன சேர்மேன் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.