திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல்! அமைச்சரே ஒப்புதல்!

ம.பா.கெஜராஜ்,
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் குறிப்பிடுகையில், திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யையும் சூசமாக தாக்கி பேசுவதாக நினைத்துக் கொண்டு அவர் இவ்விதமாக பேசினார்.
அதில் ஒரு படத்திற்கு ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை வாங்குகிறார்கள் என்றும், படம் ரிலீஸ் ஆகும் போது இலவசமாக டிக்கெட் கொடுக்க வேண்டும் ஆனால் ரசிகர்களுக்கு 2 ஆயிரத்திற்கு டிக்கெட் விற்கிறார்கள் என்றும் கூறிய அவர் இவர்களால் நாட்டை பாதுகாத்திட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
அதே போல் விஜய் போன வருஷத்தில் இருந்துதான் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறார், நாம் 15 ஆண்டுகளாக கொடுத்து வருகிறோம். கட்சி ஆரம்பிக்க போவது தெரிந்து தான் ஒரு ஆண்டாக இதனை கொடுத்து வருகிறார் என்றும் அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசினார்.
மேலும் இந்தியாவிலேயே 75 வயதான கட்சி நமது திமுகதான், இந்தியாவிலேயே திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் தாமோ அன்பரசன் தெரிவித்தார்.
இது குறித்து திமுக தொண்டர் ஒருவர், நமது கழக ஆட்சியில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் அதிக ரேட்டுக்கு விற்கப்படுவதை அமைச்சரே ஒப்புக் கொள்கிறாரே "ச்சே" என்று கமென்ட் அடித்தார்.
ஏற்கனவே அமைச்சர் மனோஜ் தங்கபாண்டியன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தாக்கி பேசிய நிலையில் அன்பரசனும் அதே பாணியை கடைப்பிடித்து இருக்கிறார் என்பது நினைவு கூறத்தக்கதாகும்.