ஏதாவது நடக்கும் முன் அந்த ஸ்லாப்புகளை புதுசா போடுங்க!

ஏதாவது நடக்கும் முன் அந்த ஸ்லாப்புகளை புதுசா போடுங்க!

ஜி.கே.சேகரன்,

 ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டு சிமென்ட் ஸ்லாப்புகள் உடைந்ததால் அச்சத்துடன் செல்லும்  வாகன ஓட்டிகள்... விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இங்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனால் இரு பக்கங்களிலும் வாகனங்கள் செல்லும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது.

 இந்நிலையில் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலை பக்கவாட்டில் சிமென்ட் ஸ்லாப்புகள் சுக்கு நூறாக  உடைந்து உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகளும், கனரக வாகன ஓட்டிகளும், பள்ளி, கல்லூரிக்கு மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள்  அச்சத்துடன் சென்று வருகின்றனர். 

 மேலும், இந்த பகுதியில் உள்ள உடைந்த ஸ்லாப்புகளை அகற்றி சீர் செய்யாமல், ஸ்லாப்புகள்

உடைந்த பகுதியில் தடுப்பு வேள்வி போடப்பட்டுள்ளதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 இதனால் அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக உடனடியாக புதிய ஸ்லாப்புகளை போட்டு சாலையை சீர் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.