கள்ளக்காதல் விவகாரம்! ஐபிஎஸ் அதிகாரி அவரது வீட்டுக்கு அவரே தீ வைத்துக்கொண்டார்!

கள்ளக்காதல் விவகாரம்! ஐபிஎஸ் அதிகாரி  அவரது வீட்டுக்கு அவரே தீ வைத்துக்கொண்டார்!

ம.முருகன்,

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அருண் ரெங்கராஜ் என்கிற ஐபிஎஸ் அதிகாரி அவரது வீட்டுக்கு தீ வைத்துக்கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 இது பற்றின விவரம் வருமாறு, 

 ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கருமையா வீதியைச் சேர்ந்தவர் மாதேஷ்வரன். இவர் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவரின் மகன் அருண் ரங்கராஜன். இவர் 2012-ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிக்குச் சேர்ந்தார். பணியில் இருந்தபோது அதே மாநிலத்தில் பணியாற்றிய இலக்கியா கருணாகருன் என்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை காதலித்து  திருமணம் செய்துகொண்டார்.

   இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஓர் ஆண் குழந்தை உள்ளது. இருவரும் கர்நாடகா மாநிலத்துக்கு கடந்த சில பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளனர்.

  அருண் ரங்கராஜன் கலாபுர்கி மாவட்டத்தில் உள் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி-யாக பணியாற்றியபோது, அதே மாவட்டத்தில் பணியாற்றிய  பெண் சப் இன்ஸ்பெக்டர் சுஜாதா  என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. சுஜாதாவின் கணவர் கண்டப்பாவும் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.

   இருவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளகாதல் விபரம்  குறித்து கண்டப்பா அருண் ரங்கராஜனின் மனைவியான இலக்கியா கருணாகரனிடம் கூறி உள்ளார்.

   இதனால், ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜன், சுஜாதாவின் கணவர் கண்டப்பாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கண்டப்பா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அப்போது கர்நாடகா மாநிலத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அருண் ரங்கராஜன் தார்வார் மாவட்ட உள் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி-யாக மாற்றப்பட்டார்.

   அருண் ரங்கராஜனுக்கும், பெண் உதவி ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட காதலின் காரணமாக, அவரின் மனைவி இலக்கியா கருணாகரன் குழந்தைகளுடன் கணவரை விட்டு பிரிந்து சென்றார். அவர்களுக்கு விவாகரத்தும் ஆகியுள்ளது.

  அப்படியிருக்க, அருண் ரங்கராஜனும்சுஜாதாவும் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தினர்.  இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அருண் ரங்கராஜன் மற்றும் பெண் எஸ்.ஐ சுஜாதா ஆகியோர் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்துக்கு வந்துள்ளனர். அங்கு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

   இதில், ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜன், சுஜாதாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சுஜாதாவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.  காயமடைந்த சுஜாதா, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

   சுஜதாவிடம், மருத்துவர்கள் விசாரித்ததில் கள்ள காதல் கணவர் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜன் அடித்ததாக கூறியுள்ளார்.  அப்போது டாக்டர்கள் கோபி கோலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

  மருத்துவமனைக்கு வந்து விசாரித்த போலிசாரிடம் சுஜாதா அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், ஆபாசமாகத் திட்டுதல், தாக்குதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கோபி போலீஸார், ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 அப்போது வழக்கை விசாரித்த  நீதித்துறை நடுவர் விஜய் அழகிரி, ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜனை தனது சொந்த ஜாமீனில் விடுவித்தார்.

அதன் பின்னர் அருண் ரெங்கராஜ், கோபிச்செட்டிப்பாளையத்திலேயே தங்கியிருந்த நிலையில், இன்று அவருக்கும் சுஜாதாவுக்கும் தகறாரு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அருண் ரெங்கராஜ் தனது வீட்டுக்கு தீ வைத்துவிட்டு உள்ளேயே இருந்தார்.  

 பின்னர் அவரை போலீசார் மீட்டுள்ளனர். இந்த பணியின் போது காவல் ஆய்வாளர் காமராஜை அருண் ரெங்கராஜ் தாக்கியதால் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.